பெங்களூரில் ஆசிரியர் ஒருவர் தண்டித்ததாகக் கூறப்படும் நான்காம் வகுப்பு மாணவி சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கங்கம்மாகுடி ஆர்.டி. இன்டர்நேஷனல் பள்ளி மாணவி நிஷிதா, அவரது வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களை தண்டிக்கும்போதுமதியம் 1.30 மணியளவில் சரிந்து விழுந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
ஆசிரியர்கள் சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் உடல் சிறுமியின் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
சிறுமியின் தந்தை காவல்நிலையத்தில் புகார் அளித்ததால், 174 சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…