Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

என்எல்ஏசி ஒப்பந்த தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

Baskaran Updated:
என்எல்ஏசி ஒப்பந்த தொழிலாளர் முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி Representative Image.

புதுச்சேரியில் என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது தொடர்பாக ப நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம்  நெய்வேலியில் மத்திய அரசின் என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. நிலக்கரி பற்றாக்குறையை போக்க கூடுதல் சுரங்கம் அமைக்க நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சுற்றுவட்டார பகுதிகளில் அளவிடும் பணிகள் தொடங்கப்பட்டது.

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி பணி நிரந்தரம் செய்வது, அதுவரை குறைந்தபட்ச ஊதியமாக ரூ.50,000 வழங்குமாறு 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்ட ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் என்.எல்.சி. நிர்வாகத்திடம் மனு அளிக்கப்பட்டது.

ஆனால், நிர்வாகம் அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து வரும் 15ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட போவதாக ஜீவா தொழிலாளர் சங்கம் தரப்பில் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து புதுச்சேரியில் மத்திய தொழிலாளர் இணை ஆணையர் ரமேஷ் குமார் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை. முத்தரப்பு பேச்சில் உடன்பாடு எட்டப்படாததால் ஜீவா ஒப்பந்த தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ள வேலை நிறுத்த போராட்டம் உறுதியாகி இருக்கிறது.

வரும் 15ஆம் தேதி வேலை நிறுத்தத்தை தொடங்கும் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். வேலை நிறுத்த போராட்டம் உறுதியானால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மின் விநியோக தட்டுப்பாடு அபாயம் உருவாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்