இந்தி பேசத் தெரியாத ஊழியர்களை அவமதிக்கும் வகையில் சுற்றறிக்கை அனுப்பியதற்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் தலைவர் நீர்ஜா கபூர் வெளியிட்ட சுற்றறிக்கை ஒன்று, இந்தி பேசாத மக்களையும், அந்நிறுவனத்தில் பணிபுரியும் இந்தி தெரியாத ஊழியர்களையும் அவமதிக்கும் வகையில் இருந்ததாகச் சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரத்தில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதிஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
மேலும், இந்தி பேசாத மக்களையும் மற்றும் இந்தி பேசாத ஊழியர்களையும் அவமதித்ததுக்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில், நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம் தமது டிவிட்டர் பக்கத்தில் மன்னிப்பு கேட்டு பதிவு வெளியிட்டுள்ளது. அதில், அந்த சுற்றறிக்கை யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறோம் என்றும், அனைத்து மாநில மொழிகளுக்கும் மதிப்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…