Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இனி நியூஸ் பேப்பரில் பார்சல் செய்ய தடை... ஆட்சியர் உத்தரவு...

Muthu Kumar July 18, 2022 & 16:20 [IST]
இனி நியூஸ் பேப்பரில் பார்சல் செய்ய தடை... ஆட்சியர் உத்தரவு...Representative Image.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள உணவகத்தில் நியூஸ் பேப்பரில் உணவு பொருள்களை பார்சல் செய்ய தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அணைத்து ஓட்டல்களில் அச்சிட்ட காகிதங்களில் அதாவது நியூஸ் பேப்பரில் வடை பஜ்ஜி போன்ற உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் அச்சிட்ட நியூஸ் பேப்பரில் உணவுப் பொருள்களை பார்சல் செய்யதால் அதில் பிரிண்டிங் செய்யப்பட்ட எழுத்துக்களில் உள்ள வேதிப் பொருட்கள் உணவுடன் கலந்து உடலுக்கு பெரும் தீங்கை ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.
 
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தடையை மீறி காகிதங்களில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

மேலும், உணவு பொருட்களை பார்சல் செய்ய வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதுகுறித்த விழிப்புணர்வு குறும்படத்தையும் ஆட்சியர் இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்