பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டதால் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய எண்ணெய் நிறுவனங்கள் நாளை ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: மத்திய அரசு பெட்ரோல்-டீசலுக்கான கூடுதல் கலால் வரியை லிட்டருக்கு தலா ரூ.8 மற்றும் ரூ.6 என விலை குறைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். எண்ணெய் நிறுவனங்கள் கலால் வரி குறைப்பு காரணமாக சில்லறை விற்பனை விலையை உடனடியாக மாற்றி அமைத்ததற்காக தமிழ்நாடு பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் தனது கடுமையான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது. இதனால் நாளை ஒரு நாள் (மே 31) மட்டும் பெட்ரோல் டீசல் கொள்முதல் செய்வதை நிறுத்த உள்ளோம் என கூறியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…