Sri Lanka : இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த சில நாட்களாக மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கை பிரதமரான ரனில் விக்ரமசிங்கேவின் மாளிகைக்கு கடந்த 9 ஆம் தேதி போராட்டகாரர்கள் தீ வைத்து எரித்தனர். மேலும், இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்ததுவம்சம் செய்தனர்.
இதனையடுத்து, கோட்டபயவின் சகோதர்களான முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவும், முன்னாள் நிதி மந்திரி பசில் ராஜபக்சேவும் இலங்கையில் உள்ளனர். மேலும், அவர்கள் இருவரும் வெளி நாடு செல்லத் தடை விதிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
இந்நிலையில், இது குறித்து பேசிய ராஜபக்சே, “தங்களுக்கு எதிரான வழக்கு நீதிமன்றத்தால் விசாரிப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டுச் செல்லப்போவதில்லை” என சுப்ரீம் கோர்டில் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…