Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ்...? என்ன காரணம் தெரியும...?

Muthu Kumar July 19, 2022 & 08:40 [IST]
தமிழகத்தில் 987 பள்ளிகளுக்கு நோட்டீஸ்...? என்ன காரணம் தெரியும...?Representative Image.

கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மாணவி மர்ம முறையில் மரணமடந்ததுள்ளார். இதனால் பள்ளி தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று முன்தினம் திடீரென தனியார் பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தாக்கப்பட்டதை கண்டித்து நேற்று சுமார் ஆயிரம் பள்ளிகள் தன்னிச்சையாக விடுமுறை அளித்துள்ளது. இதனையடுத்து, தன்னிச்சையாக விடுமுறை அளித்த் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இதனையடுத்து, பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் நோட்டீஸில், “அரசு அனுமதி இன்றி தன்னிச்சையாக விடுமுறை விட்டது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  பள்ளி கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில் 987 தனியார் பள்ளிகள் தரும் விளக்கத்திற்கு பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்