Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அதிர்ச்சி.. அமைச்சர் மீது துப்பாக்கிச் தாக்குதல்.. ஒடிசாவில் பரபரப்பு!!

Sekar Updated:
அதிர்ச்சி.. அமைச்சர் மீது துப்பாக்கிச் தாக்குதல்.. ஒடிசாவில் பரபரப்பு!!Representative Image.

ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜார்சுகுடாவின் பிரஜராஜ்நகரில் உள்ள காந்தி சௌக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளச் சென்ற ஒடிசா சுகாதார அமைச்சர் நபா தாஸ், இன்று ஒரு போலீஸ்காரரால் சுடப்பட்டார்.

துப்பாக்கிச் சூட்டிற்கு பின்னர் மருத்துவமனை கொடுசெல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து நேரில் பார்த்த ஒருவர் கூறுகையில், "பொதுமக்கள் குறைதீர்க்கும் அலுவலக திறப்பு விழாவில், நபா தாஸ் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அவர் வந்தபோது, அவரை வரவேற்க மக்கள் திரண்டனர். திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டது. துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு போலீஸ்காரர் ஒருவர் அருகாமையில் இருந்து ஓடுவதைப் பார்த்தோம். அமைச்சர் விமானம் மூலம் புவனேஸ்வருக்கு அனுப்பப்படுவார்." என்றார்.

இதற்கிடையே, உதவி சப் இன்ஸ்பெக்டர் கோபால் தாஸ் என்பவர் தனது போலீஸ் ரிவால்வரில் இருந்து துப்பாக்கியால் சுட்டதாக துணைப் பிரிவு போலீஸ் அதிகாரி தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.

குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சரின் மார்பில் தனது சர்வீஸ் ரிவால்வரால் நான்கைந்து ரவுண்டுகள் சுட்டதாக போலீசார் மேலும் தெரிவித்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்