தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது, நீலகிரி, கோவை போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல் போன்ற பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைத்து பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வால்பாறை தாலுகாவில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சிறுமலை பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…