உத்தரபிரதேசத்தில் மணப்பெண்ணின் தந்தை அவருக்கும், மணமகனுக்கும் திருமண பரிசாக புல்டோசர் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர் பரசுராம் பிரஜாபதி தனது மகள் நேஹாவுக்கு திருமண நாளில் புல்டோசர் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த நபர் தனது மருமகன் யோகேந்திரா என்ற யோகிக்கு திருமணத்தின் போது புல்டோசர் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுமணத் தம்பதிகளுக்கு சொகுசு காருக்குப் பதிலாக ஜேசிபி கொடுத்ததற்கான காரணத்தைக் கேட்டபோது, தனது மகள் யுபிஎஸ்சிக்குத் தயாராகி வருவதாகவும், தேர்வில் தோல்வியடைந்தால், புல்டோசரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கலாம் என்றும் பரசுராம் கூறினார்.
"மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்துடன் இது செய்யப்பட்டது. டிசம்பர் 15 அன்று எங்கள் திருமண நாளில் எனது மாமனார் இதை பரிசளித்தார். இது எங்கள் மாவட்டங்களுக்கு ஒரு புதிய முயற்சி" என்று யோகேந்திரா கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…