Puducherry News Live : புதுச்சேரியில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பின்பு மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நடந்து வருகிறது. இந்நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் மீண்டும் பள்ளி திறப்பு, அடுத்த ஆண்டு தேர்வுகள் நடைபெறும் தேதி என அனைத்து விவரங்களும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் பள்ளி மீண்டும் திறப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், புதுச்சேரியில் 1 முதல் 10 வரையிலான வகுப்புகள் மற்றும் 12ம் வகுப்புக்கு ஜூன் 23ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தேரிவித்துள்ளார். மேலும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி தொடங்கும் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…