தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் சின்ன சேலம் அருகேயுள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இன்று திருவள்ளூர் மாவட்டம் கீழச்சேரியில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இத்தகவலை அறிந்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று மாணவி தற்கொலை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து, தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தர்விட்டுள்ளது.
அதன்படி, பள்ளிகளில் உட்கட்டமைப்பு, உரிய அனுமதி, விடுதி கட்டடம், தீ தடுப்பு ஏற்பாடு உள்ளிட்டவைகளை ஆய்வு செய்ய வேண்டும் என அனைத்து மாவட்ட சி.இ.ஓக்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…