தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை நுங்கம்பாக்கம், மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
இந்நிலையில், 2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவர்களுக்கு 323, 3, 61, 042 ரூபாய் செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், 10 மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ராஜ கண்ணப்பன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யா மொழி, என். கயல்விழி செல்வராஜ், எம்.எல்.ஏ. நா. எழிலன், துணை மேயர் மு. மகேஷ் குமார், மேயர் ஆர்.பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…