கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார், தனக்கு லேசான கொரோனா அறிகுறி இருந்தது அதனையடுத்து வீட்டில் தனிமை படுத்திக்கொண்டேன் என கூறியுள்ளார். கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள், தயவு செய்து உங்களை தனிமைப்படுத்திக் கொண்டு உங்களை பரிசோதனை செய்துகொள்ளுங்கள். இதனால் எனது டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டது.இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், பசவராஜ் பொம்மைக்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…