ஓசூர் அருகே மகனை கத்தியால் குத்தி கொன்ற உறவினர், வேதனையில் தந்தை உயிரிழப்பு சம்பவம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.
ஓசூர் அருகேயுள்ள பேகேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அன்னையப்பா (70) இவரது மகன் சேகர் என்கிற சென்னப்பா (35) அன்னையப்பாவின் தம்பி கிருஷ்ணப்பா, இவரது 25 வயதான மகன் முனிராஜ் (எ) விஜய், அவரது மனைவி மதுபாலாவுடன் அங்குள்ள ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு விஜய்யின் மனைவி மதுபால அன்னையப்பாவை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அறிந்த சென்னப்பா, தனது தந்தையை எப்படி திட்டலாம் என மதுபாலவிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சம்பவங்கள் குறித்து மதுபாலா தனது கணவர் விஜய்க்கு தகவல் அளித்துள்ளார். மது போதையில் இருந்த விஜய் தனது நண்பர்களோடு வீட்டுக்கு சென்று மனைவியை திட்டிய சென்னப்பாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது சென்னப்பாவை தனது பெரியப்பா மகன் அண்ணன் என்று கூட பார்க்காமல் விஜய்யை கத்தியால் குத்தியுள்ளார். உடனடியாக ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்திலே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னப்பாவின் உடல் ஓசூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பேகேப்பள்ளியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. தனது மகனை, தனது தம்பியின் மகன் கத்தியால் குத்தி கொலை செய்ததால் வேதனையில் இருந்த அன்னையப்பா துக்கம் தாங்காமல் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனிடையே கொலையாளிகளான விஜய், மற்றும் நண்பர் ரேனுகா ஆரதியா இருவரையும் சிப்காட் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்குட்படுத்தபட்டு சிறையில் அடைத்தனர், மேலும் சம்பவத்தில் தொடர்புடைய அதே கிராமத்தைச் சேர்ந்த சக்தி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…