Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரான்...வெடிகுண்டு இருந்ததால் பரபரப்பு..!

madhankumar May 29, 2022 & 16:29 [IST]
பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த ட்ரான்...வெடிகுண்டு இருந்ததால் பரபரப்பு..!Representative Image.

ஜம்மு காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப்பகுதியில் அடிக்கடி பாகிஸ்தான் பகுதியில் இருந்து டிரோன்கள் பறக்கவிடப்படும் என்பதால், கூடுதல் கண்காணிப்பு பணி இங்கு நடைபெறுவது வழக்கமாக கொண்டுவந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று இந்திய எல்லைக்குள் அத்துமீறி பாகிஸ்தானுக்குச் சொந்தமான டிரோன் ஒன்று பறந்தது. இதைக் கவனித்த பாதுகாப்பு படையினர் உடனடியாக டிரோனை சுட்டு வீழ்த்தினர். கீழே விழுந்த டிரோனைக் கைப்பற்றி ஆய்வு செய்ததில் அதில், காந்தக் குண்டுகள் மற்றும் கையறி குண்டுகள் இருப்பதை கண்டறிந்தனர். 

உடனடியாக வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டன. அடுத்த மாதம் 30 ஆம் தேதி புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. 43 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை, இரண்டு வழிகளில் நடைபெற உள்ளது. அமர்நாத் யாத்திரையை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வரும் நிலையில், வெடிகுண்டுகளுடன் டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்