இந்திய உச்சநீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அமைக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற மாநில மனித உரிமை ஆணைய வெள்ளி விழா நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், 1996இல் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் தான் தமிழக மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்டது என்று கூறினார்.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுயமரியாதை மிகவும் அவசியம் என்று கூறிய முதல்வர் ஸ்டாலின், மனித உரிமைகளை காக்கும் பொறுப்பில் திமுக அரசு முழு மூச்சுடன் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், உச்சநீதிமன்ற கிளை சென்னையில் அமைய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் ஆக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த விழாவில் மனித உரிமை புகார்களை சிறப்பாக கையாண்ட கலெக்டர் மற்றும் எஸ்.பி.க்களுக்கு முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கினார். அந்த வகையில் திருவாரூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர்களுக்கும், மதுரை போலீஸ் கமிஷனர் மற்றும் கோவை எஸ்.பி.க்கு விருது வழங்கப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…