பாகிஸ்தானின் கராச்சி, லாகூர், இஸ்லாமாபாத் மற்றும் குவெட்டா உள்ளிட்ட பல நகரங்களில் இன்று காலை 7:30 மணியளவில் டிரான்ஸ்மிஷன் லைன்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பெரும் மின்தடை ஏற்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, "பலுசிஸ்தானுக்கு மின்சாரம் வழங்கும் அனைத்து டிரான்ஸ்மிஷன் லைன்களும் ட்ரிப் ஆகிவிட்டன." என்று தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் பெரும்பாலான நகரங்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது கராச்சியில் மட்டும் 90 சதவீதம் பகுதிகள் மின்சாரம் இல்லாமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், மின்சார விநியோகத்தை மீண்டும் தொடங்கும் முயற்சியில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…