நினைத்து கூட பார்க்க முடியாத அளவிற்கு இவ்வுலகில் கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கின்றன. உதாராணமாக நிலாவை காட்டி சோறு ஊட்டிய காலம்போயில், தற்போது நிலவுக்கே மனிதன் செல்லும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறிவிட்டது. ஆனால், இன்னொரு பக்கம் மக்களின் மூடநம்பிக்கை மட்டும் ஒழிந்தபாடில்லை. அப்படி ஒரு சம்பவம் தான் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ல பல்லாரி மாவட்டம் அருகே உள்ள சிரவாரா என்ற கிராமத்தை சேர்ந்த சேகர்-கங்கம்மா என்ற தம்பதியின் 12 வயது மகன் பாஸ்கர் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தான். கர்நாடகாவில் சமீப நாட்களாகவே மழை கொட்டி தீர்க்கிறது, இதனால் எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சேகர் வீட்டருகே இருந்த குழியிலும் தண்ணீர் நிரம்பியுள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் எதிர்பாராத விதமாக அந்த குழிக்குள் விழந்து மூழ்கிவிட்டான்.
ஆனால், சிறுவன் நீரில் மூழ்கியது தெரியாமல் மகனை நீண்ட நேரமாக காணவில்லை என்று அவரது தந்தையும் தாயும் தேடி அழைந்துள்ளனர். அதற்குள் சிறுவன் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். தேடி அலைந்து வீடு திரும்பிய பெற்றோர், தங்கள் மகன் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மகன் உயிரிழந்துவிட்டதை தாங்க முடியாமல் பெற்றோர் கதறி கதறி அழுதனர். அப்போது, தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள் மீது உப்பைக்கொண்டிவைத்தால் உயிருடன் வந்துவிடுவார்கள் என்று சமூக வலைத்தளத்தில் யாரோ கிளப்பிவிட்ட புரலியை நம்பி, சிறுவனின் தந்தை சேகர் மகனின் சடலத்தை வீட்டுக்குள் வைத்து, சடலம் மீது மூட்டை மூட்டையாக உப்பைக் கொட்டி சுமார் 4 மணி நேரம் சேகரும் அவரது மனைவியும் காத்திருந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்துயுள்ளது. பின்னர், இதெல்லாம் மூடநம்பிக்கை என பலர் தெரிவிக்க, பாஸ்கரனின் சடலத்தை உப்புக்குவியலில் இருந்து மீட்டு அடக்கம் செய்தனர் பெற்றோர். இருப்பினும், மகனை இழந்தை தந்தையின் ஒருபக்கம் மனதை உருக்குகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…