மகளின் சடலத்துடன் டிரெய்லர் வாகனத்தில் சுற்றிக்கொண்டிருந்த தம்பதி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தில் உள்ள மிட்செல் நகரத்தில் 33 வயதான மான்டி மில்லர் மற்றும் 28 வயதற்கான அவரது மனைவி அலெக்சாண்டர் குர்மோயரோவ் (28) ஆகியோர் கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
மில்லர் தனது வளர்ப்பு மகள் செப்டம்பர் 10-ம் தேதி அன்று இறந்துவிட்டதாக போலீசாரிடம் கூறியுள்ளார். ஆனால் குர்மோயரோவ் ஹாலோவீனுக்கு சில நாட்களுக்கு முன்பு வாஷிங்டனின் ஏர்வே ஹைட்ஸ்ஸில் மகள் இறந்துவிட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் மகள் இறந்த நிலையில், மருத்துவ உதவி எதுவும் கோரவில்லை என்று குர்மோயரோவ் விசாரணையில் ஒப்புக்கொண்டார். தானும் மில்லரும் மகளுடன் அதிக நேரம் செலவிட விரும்பியதாகவும், இது வெளியே தெரிந்தால் மகளை பிரித்து விடுவார்கள் என்று பயந்ததால் தான் மறைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…