Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!

madhankumar June 05, 2022 & 15:45 [IST]
அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!Representative Image.

மதுரை மாவட்டத்தில் பேரையூர் அருகே உள்ள சின்ன பூலாம்பட்டி பகுதியில் வசித்துவருபவர் மணிமுத்து (52) இவர் கையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

விபத்து மற்றும் அவசர சிகிச்சை வளாகத்தில் உள்ள எலும்பு சிகிச்சை பிரிவின் 3-வது தளத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். மணிமுத்துவின் மனைவி மருத்துவமனையில் அவருடன் தங்கியிருந்து தேவையான உதவிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது காலை வேளையில் உணவு வாங்கி வருகிறேன் என கூறி அவரது மனைவி வெளியே சென்றுள்ளார், அந்த நேரத்தில் மணிமுத்து அங்குள்ள கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், மணிமுத்து ஏன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சிகிச்சைக்கு வந்த நோயாளி திடீரென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மதுரைரில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்