விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் இன்று ஆடி மாத பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. மேலும் வருகிற 11-ந் தேதி பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு வழக்கமாக பிரதோஷம், பவுர்ணமி ஆகிய நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
அதன்படி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தற்போது சாரல் மழை பெய்து வரும் நிலையில் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையின் குறுக்கே செல்லும் ஓடைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பு கருதி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும், மலை அடிவார பகுதியான தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு வர வேண்டாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…