தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், 5 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இருந்த போதிலும் எல்லா நேரங்களிலும் வெள்ளை போர்டு பேருந்துகள் வருவதில்லை என்பது பலரின் புகார்களாக வந்த வண்ணம் இருந்தது. இது குறித்து பரிசீலிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சில சமயங்களில் பெண்கள் இலவச பேருந்து என நினைத்து டீலக்ஸ், மற்றும் சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றார். இந்நிலையில் பெண்கள் இலவச பேருந்துகளை அடையாளம் காணவே பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை இன்று அறிமுகப்படுத்துகிறார்.
உதயநிதி ஸ்டாலின் இந்த பிங்க் நிற பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். மேலும் ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னையின் மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…