உத்திரபிரதேச மாநிலத்தில் 82 வயது மூதாட்டி ஒருவரை பிட்புல் வகையை சேர்ந்த நாய் ஒன்று கடித்து குதறியத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த அமித், இவர் அந்த பகுதியில் உள்ள ஜிம் ஒன்றில் ட்ரைனராக பணியாற்றிவருகிறார். மேலும் இவர் தனது வீட்டில் பிட்புல் வகை நாய் ஒன்றை வளர்த்துவருகிறார். மிகவும் ஆபத்தானதாக அறியப்படும் இந்த நாயை வளர்க்க வேண்டாம் என அக்கம்பக்கத்தினர் கூறியபோதும் அதனை கேட்காமல் வளர்த்துள்ளார்.
கடந்த 12 ஆம் தேதி அமித் வேலைக்கு சென்றுவிட அவரது தாயார் சுசிலா மாடியில் காயவைத்திருந்த துணியை எடுக்க செண்டிருந்தார். அப்போது அவர் மீது பாய்ந்த பிட்புல் கழுத்து, கை, கால் என பல்வேறு இடங்களில் கடித்து குத்தறியுள்ளது, இதனால் அவர் அலறியுள்ளார் அந்த சமயத்தில் அக்கம்பக்கத்தினர் யாரும் இல்லாததால் உதவிக்கு கூட யாரும் வரமுடியவில்லை.
இதனையடுத்து மாலையில் வேலை முடிந்து திரும்பிய அமித் தனது தாயாரை வீட்டில் காணவில்லை என்பதால் மாடிக்கு சென்று பார்த்துள்ளார் அப்போது சுசிலா ரத்த வெள்ளத்தில் கிடந்தார், அருகில் நாய் வாய்முளுவதும் ரத்த கரையுடன் இருந்ததைக்கண்டு அதிர்ச்சியடைந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என கூறியுள்ளனர்.
இதனையடுத்து அவருக்கு இறுதி சடங்கை முடித்துவிட்டு, நாயை மாநகராட்சியிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளார். அப்போது பெற்ற தாய் இறந்துவிட்டதுகூட பொருட்படுத்தாமல் ஆசையை வளர்த்த நாயை கட்டிப்பிடித்து அழுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக அக்கம்பக்கத்தினர் கூறியுள்ளனர். மேலும் அந்த ஆபத்தான நாயை வளர்க்க அமித் லைசன்ஸ் பெற்றிருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…