Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்:- உஷார் நிலையில் மீட்பு படையினர்.. !

Bala July 15, 2022 & 09:44 [IST]
5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்:- உஷார் நிலையில் மீட்பு படையினர்.. ! Representative Image.

மகாராஷ்டிராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை மகாராஷ்டிரா, குஜராத், கேரளா ஆகிய மாநிலங்களில் தீவிரமடைந்துள்ளது. மழை காரணமாக குஜராத் மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள  பால்கர், ராய்காட், புனே, கோலாப்பூர் மற்றும் சதாரா ஆகிய 5 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதனைதொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 14 தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் மற்றும் 6 மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் பல மாவட்டங்களில்  நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் மக்கள்  கடும் அவதியடைந்துள்ளனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்