கடலூர் மாவட்டம் கெடிலம் ஆற்றில் மூழ்கி சிறுமிகள் உட்பட 7 பேர் உயிரிழந்த நிலையில் பிரதமர் மோடி அவர்களின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கடலூர் அருகே நெல்லிக்குப்பம் போலீஸ் சரகம் கீழ் அருங்குணம் குச்சிபாளையம் பகுதியில் ஓடும் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. கோடைகாலங்களில் இந்த தடுப்பணையில் உள்ளூர் பொதுமக்கள் இறங்கி குளிப்பது வழக்கம், அந்த வகையில் சமீபத்தில் பெய்த கனமழையால் தடுப்பணையில் தண்ணீர் அதிகமாக தேங்கியிருந்துள்ளது, அதனை அறியாமல் நேற்றைய தினம் அந்த பகுதியை சேர்ந்த பிரியா, மோனிசா, சங்கவி, சுமுதா, காவியா, பிரியதர்ஷிணி, நவி ஆகியோர் தடுப்பணையில் குளிக்க சென்றபோது நீர் அதிகம் தேங்கி உள்ளது தெரியாமல் ஆழமான பகுதியில் குதித்துள்ளனர்.
அப்போது அவர்கள் அனைவரும் கூச்சலிட்டதை தொடர்ந்து ஊர் மக்கள் அவர்களை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், ஆனால் அவர்கள் 7 பெரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி கெடிலம் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழந்த சம்பவம் கேட்டு அதிர்ச்சியடைந்தேன், இந்த துயர் மிகுந்த வேளையில், அவர்களின் குடும்பங்கள் மன சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…