Tamilnadu News Live : தமிழக பேருந்துகளில் விரைவில் இ-டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் வளர்ந்துவரும் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்ப பேருந்துகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பேருந்துகளில் பயண அட்டைகளுக்கு பதிலாக இ-டிக்கெட் வழங்கும் முறையை அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த ஆண்டுக்குள் இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
அதன்படி, Gpay போன்ற ஆன்லைன் செயலிகள் மூலம் பயணிகள் தங்கள் மொபைல் போனிலிருந்து கட்டணத்தை செலுத்தி பயண சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என கூறியுள்ளார். மேலும் நேரடி பணப் பரிமாற்றத்தை இதன் மூலம் தவிர்த்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, 2022ம் ஆண்டு இறுதிக்குள் சென்னையில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என கூறினார். மேலும், தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பேருந்துகளிலும் படிப்படியாக இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் எனவும் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…