வளர்ச்சிப் பணிகளுக்கு எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று குற்றம் சாட்டினார்.
சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் ஹர்மோகன் சிங் யாதவின் 10வது நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய மோடி, “எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருந்தபோது எடுத்த முடிவுகளை அமல்படுத்த முடியாமல் பலமுறை அரசுப் பணியில் தற்போது தடைகளை ஏற்படுத்துகின்றன." என்றார்.
மேலும் பேசிய அவர் "கடந்த ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவுகளை இப்போது செயல்படுத்தினால், அவர்கள் அதை எதிர்க்கிறார்கள். நாட்டு மக்கள் அதை விரும்பவில்லை." என்று கூறியது சமீப காலமாக "சித்தாந்தம் அல்லது அரசியல் நலன்களை சமூகத்தின் நலன்களுக்கு மேலாக வைத்திருக்கும் போக்கை நாடு கண்டு வருகிறது. இது நல்லதல்ல" என்றார்.
நாட்டின் புதிய ஜனாதிபதியாக திரௌபதி முர்மு பதவியேற்பது குறித்து பேசிய மோடி, "சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக, பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் நாட்டை வழிநடத்தப் போகிறார்." என பெருமையுடன் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…