Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம்… 2 வாரத்தில் 3 ஆவது முறை.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!

Gowthami Subramani October 10, 2022 & 12:45 [IST]
பள்ளி மாணவர்களுக்கு விஷம் கொடுத்த சம்பவம்… 2 வாரத்தில் 3 ஆவது முறை.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!Representative Image.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று, மெக்ஸிகோவின் தெற்கு மாகாணமாக உள்ள சியாபாஸில் மேல்நிலைப் பள்ளி ஒன்றில் வழக்கம் போல பள்ளிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, திடீரென மாணவர்கள் பலர் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். இதனையடுத்து, மயக்கமடைந்த 60 மாணவர்களை உடனடியாக பள்ளி நிர்வாகத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

இதனைத் தொடர்ந்து, தெரிவிக்கப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில், மாணவர்கள் அனைவருக்கும் விஷம் தரப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு கடந்த 2 வாரங்களில், இதே மாகாணத்தில் உள்ள மேலும் 2 பள்ளிகளிலும், மாணவர்களுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக, போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கான காரணம், போதைப் பொருள் கும்பல் இருக்கலாம் என அந்நாட்டின் போலீஸ் சந்தேகம் தெரிவித்துள்ளது. ஆனால், சில உள்ளூர் செய்தி நிறுவனங்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்ணீர் அசுத்தமானதாகவோ அல்லது ஃபுட் பாய்சன் ஏற்பட்டிருக்கலாம் எனவும் கூறியுள்ளனர்.

இவ்வாறு நடக்கும் தொடர் சம்பவங்களால், போலீசார் தங்களது விசாரணையை மிகத் தீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், போலீசாரின் கூற்றுப்படி, மாணவர்களுக்கு விஷம் கொடுத்ததன் பின்னணியில் போதைப் பொருள் கடத்தல் கும்பலாக இருக்கலாம் எனக் கூறப்படுவது மெக்சிகோ நாட்டில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்