காவல்துறை அதிகாரிகள் குடியிருப்பில் வசித்துவரும் கண்காணிப்பாளர் சுபம் கோஷ் என்பவரது வீட்டில் வேலை பார்த்துவருபவர் மகேஸ்வரி (41). புதுச்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த இவர் கடந்த 26 ம் தேதியன்று காவல் தலைமையகம் அருகில் தனது இருசக்கர வாகனத்தின் பெட்டியில் கைப்பையை வைத்துவிட்டு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த போது வாகன பெட்டியில் வைத்திருந்த கைப்பையில் ரூ.20,000 பணம் காணவில்லை.
இதுகுறித்து அவர் பெரியக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார், இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தபோது காவல்துறை சீருடை அணிந்த நபர் ஒருவர் அவரது இருசக்கரவாகனத்தில் இருந்து பணத்தை திருடி செல்வது பதிவாகியிருந்தது.
இதனையடுத்து நேற்று மாலை பாரதி பூங்கா அருகில், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவம் கொண்ட நபர் நடமாடி கொண்டிருந்துள்ளார், அவரை பிடித்த தனிப்படை போலீசார் விசாரித்தபோது அப்போது அவர் பெயர் காளிதாஸ் (27) என்றும், ஐஆர்பிஎன் காவலர் என்றும் தெரிவித்ததை அடுத்து அவரை சோதனை செய்ததில் அவரது பாக்கெட்டில் இருசக்கர வாகன சாவிகளின் கொத்து இருந்தது.
அதுகுறித்து போலீசார் கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். சந்தேகமடைந்த போலீசார் காவல் நிலையம் அழைத்து சென்று அவரை விசாரித்தபோது விசாரணையில் அவர் மகேஸ்வரியின் வாகனத்தில் இருந்து ரூ.20,000 திருடியதை ஒப்புக்கொண்டார். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர் அதில் பணத்தை இழந்துள்ளார், ஆனாலும் அதில் இருந்த ஆர்வம் குறையாததால் கள்ளச்சாவி போட்டு பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார், இதனையடுத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…