Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

ஸ்ரீமதியை தொடர்ந்து மற்றொரு மாணவி சாவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு..

Nandhinipriya Ganeshan Updated:
ஸ்ரீமதியை தொடர்ந்து மற்றொரு மாணவி சாவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. Representative Image.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழையபட்டியை சேர்ந்த கன்னியப்பன் - பழனியம்மாள் தம்பதியின் மகள் கார்த்திகா ஜோதி. 19 வயதான இவர் ஒட்டன்சத்திரம் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியின் விடுதியில் தங்கி படித்து வந்த கார்த்திகா ஜோதி கடந்த 21 ஆம் தேதி காலை, தான் தங்கியிருந்த விடுதியின் 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததாக சொல்லப்படுகிறது.

இதை பார்த்த விடுதி மற்றும் கல்லூரி ஊழியர்கள் மாணவியை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும், ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து மாணவியின் தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து மாணவிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஸ்ரீமதியை தொடர்ந்து மற்றொரு மாணவி சாவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. Representative Image

அத்துடன் கல்லூரி முதல்வர் தேன்மொழி, விடுதி காப்பாளர் கௌசல்யா மற்றும் மாணவியுடன் விடுதியில் தங்கியிருந்த மாணவர்களிடமும் பெற்றோரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணை நடைபெற்று வரும் நேரத்தில், சிகிச்சை பலனின்றி மாணவி கார்த்திகா ஜோதி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 

மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்கிடையில், கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவியின் உறவினர்கள் ஒட்டன்சத்திரத்தில் தாராபுரம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டதால், பதற்றம் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. 

ஸ்ரீமதியை தொடர்ந்து மற்றொரு மாணவி சாவு.. திண்டுக்கல்லில் பரபரப்பு.. Representative Image

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஏற்கனவே கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி மரணம் பெரிய பிரச்சனையை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு சம்பவம் அறங்கேறியுள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்