இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்புவில் அமைந்துள்ள அதிபர் மாளிகை முன் நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர். மேலும், கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக ஆவேசத்துடன் தடுப்பு வேலிகளை உடைத்து அதிபர் மாளிகைக்குள் நுழைந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வீடியோ காட்சிகளாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர், புதன்கிழமைக்குள் இலங்கை திரும்புவார் எனவும் சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்த்தனே தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, அதிபர் கோத்தபய இலங்கையில் தான் உள்ளார். வெளிநாட்டில் இருக்கிறார் என வெளியான தகவலில் உண்மை இல்லை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…