உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷ்ய நடத்திய ஷெல் தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு உக்ரைன் நகரமான கார்கிவ் மீது ரஷ்யா ஷெல் தாக்குதல் நடத்தியதில் மூன்று பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 31 பேர் காயமடைந்தனர் என்று அந்த பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் நகரின் மேயர் டெலிகிராமில், ஷெல் தாக்குதல் வணிக வளாகம் மற்றும் பொதுமக்கள் குடியிருப்புகள் மீது நடத்தியுள்ளதாகவும், இவை இராணுவ முக்கியத்துவம் இல்லாத இடங்கள் என்று மேயர் இஹோர் டெரெகோவ் கூறினார், பலியானவர்களில் 4 மற்றும் 16 வயதுடைய இரண்டு குழந்தைகள் அடங்கும் என கூறப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…