Tamilnadu News Live : சென்னையில் பத்திரிகையாளர்களை கண்ணியக்குறைவாக பேசியுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலையை கண்டித்து பத்திரிகையாளர் சங்கங்கம் நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
சென்னையில், தமிழ்நாடு பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம், பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்த போது பிரதமரை வரவேற்கும் விதமாக பாஜக விதிமுறைகளை மீறி பேனர்கள் வைக்கப்பட்டது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார்.
பத்திரிக்கையாளர்களுடன் தகராறு
இந்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, காவல்துறையின் அனுமதியுடன்தான் பேனர் வைக்கப்பட்டதாகவும் விதியை மீறி பேனர் வைத்ததற்கான ஆதாரம் உள்ளதா..? என்று செய்தியாளரிடம் கராராக கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு பதிலளித்த செய்தியாளர், ஆதாரம் குறித்து பேசிய போது, அவரை பேச விடாமல் தடுத்த அண்ணாமலை, “உங்களுக்கு "200 ரூபாய் நிச்சயம் எனவும் மேலும் 500, 1000, 2000 வாங்கிக்கோங்க” என கூறினார்.
போராட்டம்
இந்நிலையில், அண்ணாமலை "பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், பெண் பத்திரிகையாளரிடம் தரக்குறைவாக நடந்துகொண்ட பாஜக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்பதை வலியுறுத்தி சென்னை பத்திரிகையாளர் மன்றம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம், தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் ஆகியவை சங்கங்கள் சார்பாக நாளை போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளன.
இடம்
இந்நிலையில், நாளை (30.05.22) மாலை 4.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்ற வளாகம் அருகே போராட்டம் நடைபெறும் எனவும் அணைத்து பத்திரிக்கையாளர்களும் வர வேண்டும் எனவும் அறிவித்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…