பிரதமரின் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில், இன்று திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடி அவர்கள், இன்றும் நாளையும் தமிழகம் உட்பட நான்கு தென் மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியானது. அதன் படி, திண்டுக்கல்லில் காந்தி கிராமம் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது கனமழை பெய்து வருவதன் காரணமாக, ஹெலிகாப்டருக்குப் பதில் காரில் செல்ல இருப்பதாகக் கூறப்பட்டுகிறது. அதன் படி, பெங்களூரில் இருந்து மதுரை விமான நிலையம் வந்து, அங்கிருந்து, திண்டுக்கல்லுக்கு காரில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மதுரையில் இருந்து காந்தி கிராமம் பல்கலைக்கழகத்திற்கு 58 கிலோ மீட்டர் காரில் செல்ல திட்டமிட்டதாக கூறப்பட்டு வருகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…