பழனியில் அஞ்சல் அலுவலகங்களில் வங்கிக் கணக்கு புத்தகத்தில் தனியார் விளம்பரங்களை அச்சிட்டு அதன் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் புத்தகங்களில் விளம்பரங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அஞ்சல் நிலையங்களில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அஞ்சல் அலுவலகங்களில் வங்கிகள் போல சேமிப்புக் கணக்கு தொடங்கவும், காப்பீட்டு நிறுவனங்கள் போல காப்பீடு செய்யவும், நீண்ட கால நிதி சேமிப்பு போன்ற சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் மக்களுக்கு பல்வேறு னால திட்டங்கள் கிடைத்து வந்தன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அஞ்சல் நிலையத்தில் இருந்து பஞ்சாமிர்தம் அனுப்புதல் முதல் பல்வேறு சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சுமார் ஒரு கிலோ அளவுக்கு தங்க முதலீடு பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அஞ்சல் அட்டைகள் மற்றும் அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகங்களில் தனியார் விளம்பர படங்களை அச்சடிப்பதன் மூலம் நிதி திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்தின்கீழ் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி விளம்பரம் பதிவிடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…