பஞ்சாப் பாடகர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சித்து மூஸ்வாலாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அதாவது மே 29 ஆம் நாள் ஆகும். இவர், பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் ஆசாமிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் 3 வெவ்வேறு ஆயுதங்களால், 30 தோட்டாக்களால் பயங்கரமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது நினைவு தினமான இன்று, சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் கவுரின் அவர்கள், தனது மகன் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் மண்டியிட்டு வணங்கி தரையைத் தொட்டார். அதே சமயம், ஜவஹர் கே கிராமத்தில் வசிக்கும் மக்கள், இவரது நினைவுதினத்தையொட்டி, பிரார்த்தனைக்கு ஏற்பாடு செய்துள்ளனர். தாயார் சரண் கவுரின், அந்த இடத்திற்குச் சென்று அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். இவரது வருங்கால மனைவி அமந்தீப் கவர். இவர், திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என உறுதியளித்துள்ளார். சித்து மூஸ்வாலாவின் வருங்கால மனைவியான அமந்தீப் கவுர் சித்துவின் மறைவையொட்டி, பெற்றோருடன் தனது சொந்த ஊரான மான்சா கிராமத்திற்குச் சென்றார்.
அமந்தீப் மற்றும் சித்துவுக்கு 2022 ஆம் ஆண்டில் பஞ்சாபில் உள்ள சங்கேரியில் நிச்சயம் நடந்தது. இதனைத் தொடர்ந்து, 2022 நவம்பரில் திருமணம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், மே 29, 2022 ஆம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டது, அவரது பெற்றோரையும், அமந்தீப்பையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. சமூக ஊடகங்களில், சித்துவின் புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் எப்போதும் உன்னை காதலிப்பேன், என் அன்பே” என பதிவிட்டுள்ளார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…