இந்திய காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி 3500 கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், இந்த நடைப் பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னையில் நடத்தப்பட்டுள்ளது
இந்தியாவில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நடை பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்க உள்ள இந்த நடைபயணம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து நாகர்கோவில், தக்கலை, களியக்காவிளை வழியாக நாடு முழுவதும் இந்த நடை பயணம் தொடர்கிறது.
இதனையடுத்து, தமிழகத்தில் இந்த நடைப்பயணம் ஆரம்பமாக உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சென்னையில் உள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர்.
மேலும், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நடை பயணத்திற்கு முன்னேற்பாடு, பாதுகாப்பு ஆகியவை குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி உள்பட நிர்வாகிகள் ஆலோசனை செய்துள்ளனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…