தூத்துக்குடியில் மீன்வளத்துறையின் எச்சரிக்கையால் விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், 700க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
தென் தமிழக கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா, குமரி கடல் மற்றும் அதனை ஒட்டிய கடற்பகுதியில் சுழல்காற்றானது 45 கிலோமீட்டர் முதல் 65 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் என்றும், மறு அறிவிப்பு வரும்வரை விசைப்படகு மீனவர்கள் மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் மீன்வளத் துறை அறிவித்துள்ளது. இதனால், தூத்துக்குடியில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்லவில்லை. இதனால், 250 க்கு மேற்பட்ட விசைப்படகுகளும், சுமார் 500க்கு மேற்பட்ட நாட்டுப் படகுகளும், கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. மறுஅறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரித்துள்ளதால், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தூத்துக்குடி மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும், ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு ஏற்கனவே சென்றுள்ள மீனவர்கள் பாதுகாப்பாக தீவு பகுதியில் தங்கி மீன்களை பிடிக்க வேண்டும் எனவும் மீன்வளத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…