தமிழகத்தில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளது.
இன்றைய வானிலை அறிக்கையின் படி, ஆந்திரக் கடலோரப் பகுதிகளை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி நிலவி வருகிறது. இதனால், தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, செப்டம்பர் 10 மற்றும் 11 ஆகிய இரு நாள்களில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 14 ஆம் நாளிலும், தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் கூறப்படுகிறது.
சென்னையைப் பொறுத்த வரை, அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…