Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நாயை காரில் கட்டி.. தரதரவென.. சைக்கோ மருத்துவர் வெறிச்செயல்!!

Sekar September 19, 2022 & 12:05 [IST]
நாயை காரில் கட்டி.. தரதரவென.. சைக்கோ மருத்துவர் வெறிச்செயல்!!Representative Image.

கொஞ்சம் கூட இரக்கமே இல்லாமல், தனது காரில் ஒரு நாயை கட்டி நகர் முழுவதும் வலம் வந்த சைக்கோ டாக்டரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பலரது கண்டனத்தையும் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் மருத்துவராக இருக்கும் நபர் ஒருவர், சங்கிலியால் நாயை காரில் கட்டிவிட்டு, காரை ஓட்டியுள்ளார்.

பைக்கில் சென்ற ஒருவர் இந்த அவலத்தை பார்த்து, உடனடியாக குறுக்கிட்டு, காரை நிறுத்தச் செய்தார். அவர் நாயின் சங்கிலியை அவிழ்த்து, சம்பவம் குறித்து நகரின் டாக் ஹோம் அறக்கட்டளைக்கு தெரிவித்ததோடு, பலத்த காயம் அடைந்த நாய்க்கு ஆம்புலன்ஸ் வரவும் ஏற்பாடு செய்தார்.

இந்த கொடூரத்தைச் செய்தவர் டாக்டர் ரஜ்னீஷ் கால்வா என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், அவர் தெரு நாய் தனது வீட்டின் அருகே வசிப்பதாகவும், அதை அங்கிருந்து அகற்ற முயற்சித்து இதை செய்ததாக அசால்ட்டாக கூறியுள்ளார்.

இதற்கிடையில், நகரின் டாக் ஹோம் அறக்கட்டளை ஜோத்பூர் மருத்துவர் மீது விலங்குகளை துன்புறுத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்