Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி.. ராஜஸ்தானில் சோகம்!!

Sekar October 08, 2022 & 19:36 [IST]
சிலிண்டர் வெடித்து 4 பேர் பலி.. ராஜஸ்தானில் சோகம்!!Representative Image.

ராஜஸ்தானில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் மூன்று குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 16 பேர் எம்ஜிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஹிமான்ஷு குப்தா, இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டு, இதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

ஏசிபி (மண்டோர்) ராஜேந்திர பிரசாத் திவாகர் கூறுகையில், இன்று மதியம் 2.00 மணியளவில் கிர்த்தி நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அரை டஜன் எல்பிஜி சிலிண்டர்கள் திடீரென தீப்பிடித்து வெடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

எனினும் சிலிண்டர்கள் வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சிலிண்டர்களை நிரப்பும் போது இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இதற்கிடையே சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்