ராஜஸ்தானில் 26 வயதுடைய இரட்டையர்கள் ஒரே நாளில் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இரட்டையரில் ஒருவர் பார்மரிலும் மற்றவர் சூரத்திலும் என, கிட்டத்தட்ட 900 கிலோமீட்டர் தொலைவில் வாழ்ந்த நிலையில், இருவரும் ஒரே நாளில் உயிரிழந்தனர்.
ஒருவர் அவரது வீட்டு மொட்டை மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த நிலையில், மற்றொருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதையடுத்து இறப்பிலும் இணை பிரியாத இரட்டையர்கள் சோஹன் சிங் மற்றும் சுமர் சிங் ஆகியோர் அவர்களது சொந்த கிராமமான சார்னோ கா தலாவில் ஒரே தீயில் எரிக்கப்பட்டனர்.
நெருங்கிய உறவைக் கொண்டதாகக் கூறப்படும் இந்த இரட்டைக் குழந்தைகளுக்கு அதே பகுதியில் வசிக்கும் மேலும் இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். சுமர் சிங் தனது சகோதரருக்கு ஆதரவாக சூரத்தில் பணிபுரிந்தார் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் அவர் ஆசிரியர் வேலையைப் பெறவும், பணம் சம்பாதிக்கவும் கடினமாக உழைத்தார்.
இது குறித்து கிராமவாசி ஒருவர் கூறுகையில், “சுமர் படிப்பில் சரியாக இல்லை. ஆனால் அவர் சோஹனை கடினமாக படிக்க ஊக்குவித்தார். சோஹனின் படிப்புக்கு உதவுவதற்கும் ஆசிரியர் வேலையைப் பெறுவதற்கும் போதுமான அளவு சம்பாதிக்க முடியும் என்பதால் தான் சுமர் சிங் சூரத்திற்கு வேலைக்கு சென்றார்." எனக் கூறினார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…