Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ்...ஆனாலும் கனமழை தொடரும்!

Priyanka Hochumin November 12, 2022 & 11:30 [IST]
தமிழகத்திற்கு விடுக்கப்பட்ட ரெட் அலெர்ட் வாபஸ்...ஆனாலும் கனமழை தொடரும்!Representative Image.

தமிழகத்திற்கு அறிவித்த ரெட் அலெர்ட்டை திரும்பப் பெறுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் அங்கங்கே கனமழை தொடர்ந்து வருகிறது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு இலங்கை பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது. இந்நிலையை தொடர்ந்து மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது வட தமிழக கடலோரப் பகுதி மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வருகிறது. இதனால் இன்று தமிழகத்தில் அதி கனமழையும், நாளை முதல் நவம்பர் 16 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று நிர்வாக காரணமாக தமிழகத்திற்கு அளித்த ரெட் அலெர்ட் எச்சரிக்கையானது திரும்ப பெறப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்