ரயில் கார்டு ஒருவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த 36 வயது பெண் மினிமோல். இவர் ஜோலார்பேட்டை ரயில்நிலையத்தில் ரயில் கார்டு ஆக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் பச்சைக் கொடி காட்டும் பணியில் மினிமோல் ஈடுபட்டிருந்தபோது, தவறி விழுந்துள்ளார். இது தெரியாமல் ரயிலை இயக்கிய டிரைவர், அடுத்த ரயில் நிறுத்தத்தில் பின்னே இருந்து பச்சைக்கொடி காட்ட வேண்டிய மினிமோல் காணாமல் போனது குறித்து மேலதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அவர்கள் நடத்திய தேடுதலில், குடியாத்தம் அருகே உள்ள ரயில் நிலையம் அருகே மினிமோல் உடல் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…