தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை இன்று சந்தித்துப் பேசினார்.
பிரதமருடனான சந்திப்பின் போது, செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு அளிக்கப்பட்ட ஆதரவுக்கும், நிகழ்ச்சியை தொடங்கி வைக்க பிரதமர் வந்ததற்கும் ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
மேலும் மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, தற்போது மத்திய அரசிடம் நிலுவையில் உள்ள நீட் தேர்வுக்கு எதிரான மசோதா போன்ற மசோதாக்களுக்கான ஒப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய பட்டியலையும் பிரதமர் மோடியிடம் ஸ்டாலின் வழங்கினார்.
இதன்படி கச்சத்தீவு இலங்கையிடம் இருந்து மீட்பது மற்றும் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை மீட்டெடுப்பது குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.
மேலும் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். தேசிய கல்விக் கொள்கை, காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு மாநில அரசின் எதிர்ப்பையும் முதல்வர் எழுப்பினார்.
இந்த சந்திப்பின்போது திமுக எம்பி டி.ஆர்.பாலு மற்றும் தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் பின்னர் புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…