தூத்துக்குடியில் தண்ணீர் லாரி மோதி, பள்ளி மாணவன் ஒருவன் பலியான சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் அதே பகுதியில் செஞ்சல் மற்றும் சிமெண்ட் விற்பனை செய்யும் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு பள்ளிக்குச் செல்லும் வயதில் அஜய் (வயது 7) மற்றும் அஜீஸ் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவர் வழக்கம் போல, இவரது மகன்களை அழைத்து பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது வாகனம் ராஜபாளையம் அருகே சென்ற சமயத்தில் அப்பகுதியில் இருந்த வேகத்தடையை தாண்டுவதற்காக வாகனத்தை மெதுவாக செலுத்தியுள்ளார்.
அந்த சமயத்தில், அவர்களது வாகனத்திற்குப் பின்னால் வந்த தனியார் தண்ணீர் லாரி ஒன்று அவர்கள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், வாகனத்தில் இருந்த மகேஷ் மற்றும் அவரது மகன்கள் என மூவருமே தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் மூத்த மகன் அஜய் நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பலியானார். மகேஷ் மற்றும் அவரது இளைய மகன் அஜீஸ் இருவருமே பலத்த காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர். இதில், லாரியை ஓட்டி வந்த டிரைவரான மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தந்தை கண்முன்னே மகன் இறந்த சம்பவம் குடும்பத்தினாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…