Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தத்தளித்த பயணி.. உயிரை பணயம் வைத்த போலீசார்.. திக் திக் சம்பவம்!!

Sekar July 17, 2022 & 11:04 [IST]
தத்தளித்த பயணி.. உயிரை பணயம் வைத்த போலீசார்.. திக் திக் சம்பவம்!!Representative Image.

பிளாட்பாரத்தில் இருந்து திடீரென தண்டவாளத்தில் இறங்கிய பயணியால் ரயில் வருவதைக் கண்டு மீண்டும் ஏற முடியவில்லை. இதைக் கண்ட ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) விரைவாக செயல்பட்டு பயணியின் உயிரை காப்பாற்றியது நெகிழ வைத்துள்ளது.

பெங்களூர் கே.ஆர்.புரம் ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது. 

அந்த சிசிடிவி வீடியோவில், ரயில் பாதையை கடக்க பயணி பிளாட்பாரத்தில் இருந்து இறங்குவதைக் காட்டுகிறது. ஆனால் அப்போது ஒரு ரயில் வேகமாக வருவதை உணர்ந்த அவர் மீண்டும் நடைமேடையில் ஏற முயன்றார். ஆனால் அவரால் முடியவில்லை.

இதை கவனித்த ஆர்பிஎப் கான்ஸ்டபிள் பிரதீப் குமார் மற்றும் ஏஎஸ்ஐ ரவி ஆகியோர் உடனடியாக விரைந்து வந்து ரயில் கடந்து செல்லும் சில நிமிடங்களுக்கு முன்பு அவரை தண்டவாளத்தில் இருந்து இழுத்தனர்.

வீடியோவில், பயணிகளுக்கு உதவ மற்ற பணியாளர்களும் விரைந்து செல்வதைக் காணலாம்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை காலை நடந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஆர்பிஎப் போலீசாரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி பலரும் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்