Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

உலகின் முன்மாதிரி சமுதாயமாக இந்தியா.. ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!!

Sekar August 21, 2022 & 18:15 [IST]
உலகின் முன்மாதிரி சமுதாயமாக இந்தியா.. ஆர்எஸ்எஸ் தலைவர் அதிரடி!!Representative Image.

இந்தியா முழு உலகிற்கும் ஒரு முன்மாதிரி சமுதாயமாக உருவாகும் வகையில், சமுதாயத்தை கட்டமைக்கவும், ஒருங்கிணைக்கவும் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது என்று அதன் தலைவர் மோகன் பகவத் ஞாயிற்றுக்கிழமை கூறினார். தனி நபராக அல்லாமல் சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக சேவை செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்று பகவத் கூறினார்.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் (ஆர்எஸ்எஸ்) டெல்லி பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், அதன் சேவகர்கள் மேற்கொள்ளும் பல்வேறு நலப்பணிகள் குறித்து மோகன் பகவத் பேசினார். 

இந்தியர்களின் அடிப்படை இயல்பு மற்றும் டிஎன்ஏவின் காரணமாக இயல்பாகவே மக்கள் பெரும்பாலும் தனிநபர்களாக இல்லாமல் சமூகமாக நினைக்கிறார்கள். அவர்களை நாம் மேலும் ஊக்குவிக்க வேண்டும் என்றார். 

பொதுநலப் பணிகளைப் பற்றிப் பேசிய பகவத், தனிப்பட்ட நலன்களைப் பற்றி சிந்திக்காமல் சமூகத்திற்காக உழைக்குமாறு ஆர்எஸ்எஸ் தொண்டர்களிடம் கூறினார். நலப் பணிகளைச் செய்யும்போது 'எனது மற்றும் என்னுடையது' என்பதை விட "நாம் மற்றும் நம்முடையது" என்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் இது ஒரு சமூகமாக உருவாக உதவும் என்றும் அவர் கூறினார்.

ஆர்எஸ்எஸ் தலைவர் மேலும் கூறுகையில், சமூகத்தின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பல ஆளுமைகள் நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்து பங்களித்தனர் என்றும், இருந்தாலும் நாம் ஒரு சமூகமாக வளர நேரம் பிடித்தது என்றும் கூறினார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்