Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை: கூடுதல் அவகாசம் வழங்கல்

Baskarans Updated:
சாத்தான்குளம் கொலை வழக்கு விசாரணை: கூடுதல் அவகாசம் வழங்கல்Representative Image.

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் வழக்கை விசாரிக்க மேலும் 3மாதங்கள் கூடுதல் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை  உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரது மகன் பெலிக்ஸ். கடந்த 2020ஆம் ஆண்டு விசாரணை ஒன்றிக்காக சாத்தான்குளம் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இரட்டை கொலை வழக்கு தொடர்பாக அப்போதைய சாத்தன்குளம் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கு மதுரை முதலாவது செசன்சு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும் என ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்தது. ஆனால் சாட்சிகளிடம் விசாரணை நடத்துவதில், தாமதம் ஏற்படுதவதால்,இந்த வழக்கை விசாரித்து முடிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில், மாவட்ட நீதிமன்றம் அவகாசம் பெற்றிருந்தது. இந்த அவகாசத்தை மேலும் சில மாதங்கள் நீட்டித்து உத்தரவிடக்கோரி மதுரை மாவட்ட முதலாவது செசன்சு நீதிமன்றம் சார்பில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு விசாரணையில், இன்னும் 7 சாட்சிகளிடம் சாட்சியம் பெற வேண்டி விசாரணை செய்ய உள்ளது என சி.பி.ஐ. தரப்பு வக்கீல் தெரிவித்தார். அப்போது நீதிபதி, இந்த வழக்கில் மேலும் எத்தனை சாட்சிகளிடம் விசாரிக்க வேண்டும், எவ்வளவு கால அவகாசம் தேவை? என்பது குறித்து எழுத்து பூர்வமாக, சி.பி.ஐ. தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமாகியது என்றும் மேலும் 8 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருப்பதால் 2-3 மாதம் கூடுதல் அவகாசம் தேவை என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஆணை பிறப்பித்துள்ளது.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்